×

விதிமுறை மீறி சுவர் விளம்பரம் அதிமுக, தேமுதிக உள்பட 19 பேர் மீது வழக்கு

நாமக்கல், ஏப். 5: நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் அனுமதியின்றி ஊர்வலம் நடத்தியது, சுவர் விளம்பரம் எழுதியதாக  அதிமுக., தேமுதிக மற்றும் இதர கட்சியின் நிர்வாகிகள் 19 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். நாமக்கல் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி கொமதேக, அதிமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம் மற்றும் சுயேட்சைகள் என 29 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தற்போது தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி பொது பார்வையாளராக வாணிமோகன், போலீஸ் பொது பார்வையாளராக ஜெயராஜ் மற்றும் செலவின கண்காணிப்பாளராக மையூர்காம்ளே, ராஜேஸ் ஆகியோரை, இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியானது முதல், நேற்று வரையிலும், நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் விதிமுறை மீறி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டது, ஊர்வலம் நடத்தியது மற்றும் சுவர் விளம்பரங்கள் எழுதியதாக அதிமுக, தேமுதிக மற்றும் இதர கட்சிகளின் நிர்வாகிகள் 19 பேர் மீது, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அந்தந்த காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags : DMK ,Adivasis ,
× RELATED கமுதியில் திமுக அலுவலகம் திறப்பு